close
Choose your channels

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகை திடீர் தலைமறைவு

Thursday, October 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடிகைகள் ரகுல் ப்ரீத்தி சிங், தீபிகா படுகோன், ஷரதா கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை சப்னா பாப்பி என்பவருக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் வெளிவந்தது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர் போதைப்பொருள் அதிகாரிகளுக்கு முன் ஆஜராக வேண்டிய நிலையில் திடீரென தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லண்டனில் பிறந்து வளர்ந்த சப்னா பாப்பி திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுஷாந்த்சிங் நடித்த ’டிரைவ்’ உள்பட ஒருசில பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் வெப்சீரீஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் சப்னா பாப்பி நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.