close
Choose your channels

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' மூத்த மருமகள் இவர்தானா? 4 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் பிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’முதல் பாகம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகம் தொடங்கிய சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் தந்தையாகவும் அவர் ஜோடியாக நடிகை நிரோஷாவும் நடிக்க இவர்களின் மூன்று மகன்கள் ஆகாஷ், கதிர்வேல் மற்றும் வசந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்

இந்த நிலையில் மூத்த மகனுக்கு திருமணம் ஆகும் முன்பே மற்ற இரண்டு மகன்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க தற்போது அவரது பெற்றோர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகளாக சரண்யா துரடி என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ’ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்த நிலையில் அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு சின்னத்திரையில் இருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது திருமணத்திற்கு பின் 4 ஆண்டுகள் கழித்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ரீஎண்ட்ரி தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. ’ஆயுத எழுத்து’ சரண்யா 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ரீஎண்ட்ரி ஆக இருப்பதை அடுத்து இந்த சீரியல் மேலும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.