கணவருடன் நெருக்கமான ரொமான்ஸ்: நடிகை ஸ்ரேயா சரண் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,July 06 2021]

கணவருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் வீடியோக்களை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண் என்பதும், தற்போது அவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா சரண் தனது கணவருடன் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட நெருக்கமான ரொமான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் அவர் தனது கணவரிடம் ’நான் செய்யும் எந்த விஷயம் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும்’ என்று கேட்க அதற்கு அவரது கணவர், ‘உன்னுடைய போனில் அதிக ஸ்பேஸ் இல்லை என்று நீ கூறுவது தான்’ என்று பதிலளிக்க இருவரும் சிரிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஸ்ரேயா சரண் ’ஜஸ்ட் லைக் தட்’ என்ற கேப்ஷனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சரண்யா - பொன்வண்ணன் மகள் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ஆச்சரியம்!

நடிகை சரண்யா மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தம்பதியின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆச்சரியம் அளித்துள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குபவர் வடிவேலு பட இயக்குனரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போதும் அவர்தான் தமிழ் திரை உலகின் நம்பர்-1 நடிகை

'தளபதி 67' திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த பிரபல நடிகரின் தந்தையா?

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் கார்த்தி: காரணம் இதுதான்!

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை திரைத்துறையின் பிரதிநிதிகளாக நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி உள்ளிட்ட ஒரு சிலர் சந்தித்துள்ளனர். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள

ரவுடி பேபி சூர்யா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்....!

கடந்த 2 நாட்களாக டிக் டாக் சூர்யா, லக்கி இலக்கியா பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.