இந்த பையனை மட்டும் திருமணம் செய்ய மாட்டேன்: திருமணம் குறித்து டாப்ஸி

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து மனம்திறந்த கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி, அதன்பின் அஜித்தின் ’ஆரம்பம்’ ஐஸ்வர்யா தனுஷின் ’வை ராஜா வை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது அவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையுடன் இருக்கும் டாப்ஸி அவ்வப்போது சமூக குற்றங்கள் குறித்து தைரியமான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார் என்பதும் அவரது கருத்துக்கு ரசிகர்களின் ஆதரவு குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் டாப்ஸி. நான் திருமணம் செய்யப் போகும் நபர் எனக்கு மட்டும் பிடித்தால் போதாது என்றும், என் பெற்றோருக்கும் பிடிக்க வேண்டும் என்றும், என் பெற்றோர்கள் ஏற்காத பையனை நாம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனை நான் என்னிடம் டேட் செய்தவர்களிடமே வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன் என்றும் என்னைப் பொருத்தவரை காதல் என்பது டைம் பாஸ் இல்லை என்றும் கூறினார். மேலும் தனது பெற்றோர்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துகிறார்கள் என்றும், நான் திருமணம் செய்யாமலே இருந்து விடுவேனோ என்று கவலைப் படுகிறார்கள் என்றும் கூறிய டாப்ஸி, விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'குக் வித் கோமாளி' அஸ்வின் படத்தின் இரண்டு ஹீரோயின்கள் யார் யார்?

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் வேற லெவலில் பிரபலமான அஸ்வின். என்ன சொல்ல போகிறாய்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்றும்

'வலிமை' படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு?

அஜித்தின் 'வலிமை' படப்பிடிப்பு நடைபெற்ற அதே இடத்தில் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

சென்னை திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று இருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சென்னை திரும்பியுள்ளார். 

ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது...! அதுவும் பல மொழிகளில்....

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில், ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விண்ணை தாண்டியும் வரவேணாம், வீட்டை தாண்டியும் வரவேணாம்: சிம்புவின் 'தப்பு பண்ணிட்டேன்' பாடல்!

சிம்பு பாடிய 'தப்பு பண்ணிட்டேன்' என்ற பாடலின் டீசர் நேற்று வெளியான நிலையில் இன்று அந்த பாடல் வெளியாகும் என இந்த பாடலின் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார்