close
Choose your channels

ஜீவஜோதியின் வாழ்க்கை படமாகிறது...! அதுவும் பல மொழிகளில்....

Thursday, July 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில், ஜீவஜோதியின் வாழ்க்கை படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜங்க்லீ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சரவணபவன் உணவக நிறுவனர் தான் பி.ராஜகோபால். தென்னிந்தியாவின் உணவு சுவையை உலகளவில் அறியச்செய்த பெருமை இவரையே சாரும். ஆனால் இவர் செய்த தவறு, தன்னை விட பாதி வயதுடைய பெண் மீது ஆசைக்கொண்டதுதான், அதுவும் மூன்றாவது மனைவியாக. ஜீவஜோதி இதற்கு சம்மதிக்காததால், அவரது கணவர் சாந்தகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஜகோபால், சிறை தண்டனை பெறாமலே இறந்து விட்டார். இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து ஆதாரங்களுடன் திரட்டப்பட்ட ஆடியோ, வீடியோக்கள் தான் கதையாக உருவாக்கப்பட்டு, அது திரைப்படமாகவுள்ளது.

இதுகுறித்து ஜீவஜோதி சாந்தகுமார் பேசியிருப்பதாவது, "என்னுடைய வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களை, சட்டரீதியாக நான் சந்தித்த கஷ்டங்களை, உணர்வுபூர்வுமிக்க முறையில் இப்படம் தயாராகவுள்ளது. வசதியிருந்த முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் என்னுடைய போராட்டம் தொடர்ந்தது. என் கதையா படமாக்க முன்வந்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கின்றது. இக்கதையை திரையில் பார்க்கும்போது, ஆணாதிக்க சமூகத்தை பற்றியும், நான் அனுபவித்து வலி குறித்தும் அனைவருக்கும் தெரியும்" என்று கூறினார்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர், இப்படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார் . இவர் சமீபத்தில் பாஜக-விலும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.