close
Choose your channels

இந்த பையனை மட்டும் திருமணம் செய்ய மாட்டேன்: திருமணம் குறித்து டாப்ஸி

Friday, July 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை டாப்ஸி தனது திருமணம் குறித்து மனம்திறந்த கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை டாப்ஸி, அதன்பின் அஜித்தின் ’ஆரம்பம்’ ஐஸ்வர்யா தனுஷின் ’வை ராஜா வை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது அவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நடிப்பு மட்டுமின்றி சமூக அக்கறையுடன் இருக்கும் டாப்ஸி அவ்வப்போது சமூக குற்றங்கள் குறித்து தைரியமான கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார் என்பதும் அவரது கருத்துக்கு ரசிகர்களின் ஆதரவு குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் டாப்ஸி. நான் திருமணம் செய்யப் போகும் நபர் எனக்கு மட்டும் பிடித்தால் போதாது என்றும், என் பெற்றோருக்கும் பிடிக்க வேண்டும் என்றும், என் பெற்றோர்கள் ஏற்காத பையனை நாம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனை நான் என்னிடம் டேட் செய்தவர்களிடமே வெளிப்படையாக சொல்லி இருக்கிறேன் என்றும் என்னைப் பொருத்தவரை காதல் என்பது டைம் பாஸ் இல்லை என்றும் கூறினார். மேலும் தனது பெற்றோர்கள் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துகிறார்கள் என்றும், நான் திருமணம் செய்யாமலே இருந்து விடுவேனோ என்று கவலைப் படுகிறார்கள் என்றும் கூறிய டாப்ஸி, விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.