close
Choose your channels

'கத்தி' படத்திற்கு பின் அவரை இப்போதுதான் சந்திக்கின்றேன்: நடிகர் சதீஷ் பகிர்ந்த புகைப்படம்!

Tuesday, April 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கத்தி படத்திற்கு பின் அவரை இப்போதுதான் சந்திக்கிறேன் என நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’கத்தி’ திரைப்படத்தில் சமந்தா, சதீஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எட்டு வருடங்களுக்கு பிறகு தற்போது ’கத்தி’ படத்தில் உடன் நடித்த சமந்தாவை இப்போது தான் சந்திக்கின்றேன் எனவும் ‘கத்தி’ திரைப்படத்தின்போது நிகழ்ந்த சந்தோஷமான தருணங்களை மிஸ் செய்கிறேன் என்றும் கூறி நடிகை சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சதீஷ் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. மேலும் சமந்தா நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றும் சதீஷ் கூறியுள்ளார் .

இந்த நிலையில் சமீபத்தில் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்த சதீஷ், அந்த படத்தின் வெற்றி காரணமாக தற்போது ’சட்டம் என் கையில்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த திரைப்படமும் வெற்றி பெற்றால் அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.