close
Choose your channels

துல்கர் சல்மானை அடுத்து இன்னொரு பிரபல நடிகரும் விலகலா? என்ன நடக்குது 'தக்லைஃப்' படத்தில்?

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்திலிருந்து சமீபத்தில் துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரும் விலக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘நாயகன்’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்த ‘தக்லைஃப்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கால்ஷீட் தேதிகள் ஒத்து வராததால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகியதாக கூறப்பட்டது. அவருக்கு பதிலாக சிம்பு உள்பட ஒரு சில பிரபல நடிகர்கள் நடிப்பதற்காக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி ஏற்கனவே வரிசையாக சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ‘தக்லைஃப்’ படத்திற்காக அந்த படங்களின் கால்ஷீட் தேதிகளை ஒதுக்கி இருந்ததாகவும் ஆனால் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதை அடுத்து மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதாக அவர் கருதியதாக தெரிகிறது.

இதனை அடுத்து ‘தக்லைஃப்’ திரைப்படத்திலிருந்து ஜெயம் ரவியும் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு வேறு புதிய நடிகரை தேர்வு செய்யும் பணியில் மணிரத்னம் இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.