close
Choose your channels

8 ஆண்டுகளுக்கு பின் தனது கணவர் பெண் என கண்டுபிடித்த மனைவி: போலீஸில் புகார்!

Saturday, September 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

8 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கணவர் ஒரு பெண் என கண்டுபிடித்த மனைவி காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஜராத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த 2013ஆம் ஆண்டு விராஜ் வர்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் தேனிலவுக்கு காஷ்மீருக்கு சென்ற போது இருவருக்கும் தாம்பத்தியம் நடைபெறவில்லை என்றும், பல நாட்களாக விராஜ் வர்தன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் மனைவியிடம் சாக்கு போக்குகளை கூறி வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் மனைவி ஒரு கட்டத்தில் தாம்பத்தியத்திற்கு கட்டாயப்படுத்திய போது சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் தனது காயம் ஏற்பட்டதாகவும் அன்றிலிருந்து தன்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை என்றும், ஆனால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்தால் தன்னுடைய பிரச்சனை சரியாகிவிடும் என்று தெரிவித்து மனைவியை சமாதானப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அறுவை சிகிச்சை செய்ய சென்றதாகவும் ஆனால் அவர் சென்றது ஆணுறுப்புகளை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை என தனக்கு தெரிய வந்ததாகவும் அதற்கு முன்புவரை அவர் பெண்ணாகத்தான் இருந்தார் என்பதை அறிந்ததும் தான் அதிர்ச்சி அடைந்ததாக அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள தொடங்கினார் என்றும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டியதாகவும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸ் விராஜ் வர்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் தனது கணவர் பெண் என்பதை அறிந்து மனைவி காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.