close
Choose your channels

பிக்பாஸ் சேரனின் நெகிழ்ச்சியான பதிவு

Tuesday, September 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சேரன் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்று புகழ் பெற்றிருந்தாலும் இன்றைய தலைமுறையினர்களுக்கு சேரன் என்றால் பிக்பாஸ் சேரன் என்று தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் அவரது நடத்தையும் நற்பண்பும் வெளியிட்டன.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சேரன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பதிவு செய்துள்ளார் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி.. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி.

இந்த பதிவிற்கு லைக்ஸ்களூம், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியால் சேரன் மீண்டும் கோலிவுட் திரையுலகில் மீண்டும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக அவரே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.