close
Choose your channels

ரஜினி மகளை அடுத்து பிரபல பாடகர் வீட்டில் நகைகள் திருட்டு.. 60 சவரன்கள் என தகவல்..!

Friday, March 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் வீட்டில் சமீபத்தில் நகைகள் திருடு போன விவகாரத்தில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் மற்றும் சிவக்குமார் என்ற டிரைவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மகளை அடுத்து பிரபல பாடகர் கே ஜே யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அபிராமபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் யேசுதாஸ் வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள் காணவில்லை என்று விஜய் யேசுதாஸ் மனைவி தர்ஷணா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து விஜய் யேசுதாஸ் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் ஏற்கனவே பணியில் இருந்து விலகியவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினி மகள் வீட்டில் நகையை திருடியவரை கண்டு பிடித்தது போல் இந்த திருட்டை செய்தவர்களையும் விரைவில் போலீசார் கண்டுபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment