close
Choose your channels

சேர்ந்து நடித்தால் நட்பு பாதிக்கும்: ஐஸ்வர்யா தத்தா

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களாக யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருந்தாலும் இருவரும் மிகவும் நெருக்கமான தோழிகளாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் உள்ளனர். இன்றுவரை இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து ஒன்றாகவே வெளியில் சென்றும் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதும் இருவரும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தது. நல்ல கதை கிடைத்தால் இருவரும் சேர்ந்து நடிக்கவும் திட்டமிட்டும் இருந்தனர். ஆனால் தற்போது ஒரே படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஐஸ்வர்யா தத்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஒரே படத்தில் இருவரும் நடித்தால் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அது தங்கள் நட்பை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் இருவரும் நீண்டநாள் தோழிகளாக இருக்க, இருவரும் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க முடிவு செய்ததாகவும் ஐஸ்வர்யா தத்தா கூறினார்.

மேலும் யாஷிகா நடித்த ’ஜாம்பி’ படத்தை சமீபத்தில் பார்ப்பதாகவும் அந்த படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் யாஷிகா கஷ்டப்பட்டு தற்போது ஒரு நல்ல நிலைக்கு வந்துள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஐஸ்வர்யா தத்தா மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.