close
Choose your channels

மகளின் 12வது பிறந்த நாள்.. ஐஸ்வர்யா ராயின் நெகிழ்ச்சியான வாழ்த்து: அசத்தல் புகைப்படங்கள்..!

Friday, November 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகளுக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லட்சக்கணக்கான லைக் குவிந்து வருகிறது

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் அவரது பிறந்த நாள் தற்போது கொண்டாடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’எனது அன்பு மகள் ஆராத்யா, உன்னை நான் எல்லையில்லாமல் நேசிக்கிறேன், என்றென்றும் நேசிக்கிறேன். என் வாழ்க்கையின் கட்டுக்கடங்கான அன்பு நீதான், உனக்காகவே நான் சுவாசம் செய்கிறேன். என் அன்பே, இனிய 12 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை எப்போதும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும், நீ நீயாக இருப்பதற்கு நன்றி. உன் மீது எனக்கு மதிப்பில்லாத அன்பு, அதிகமான நேசம் இருக்கிறது. நீதான் எனக்கு மிகச் சிறந்தவள் என்று குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர்களும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஆராத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.