அஜர்பைஜானில் தொடர்ந்து நடக்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு.. டிசம்பர் 24ல் சென்னை வருவாரா அஜித்?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்கும் என்று கூறப்படுகிறது. சென்னையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ’கலைஞர் 100’ விழா கொண்டாடப்படும் நிலையில், அஜர்பைஜானில் இருந்து இந்த நிகழ்ச்சிக்காக அஜித் சென்னை வருவாரா? அல்லது தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக முடித்துவிட்டு அதன் பிறகு தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித், த்ரிஷா நடிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments