close
Choose your channels

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அஜித்: என்ன காரணம்?

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில மணி நேரமாக அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் அஜீத் பொது இடத்திற்கு வந்துள்ளார் என்பதும் அந்த சமயத்தில் அஜித்தை ரசிகர்கள் சூழ்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார்கள் என்பதும் தெரியவருகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அஜித் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர் அஜித் சென்னை மாநகர காவல் நிலையத்துக்கு வருகை தந்ததை அடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள்தான் கடந்த சில மணி நேரமாக வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அஜித் ஏன் வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.