மது பழக்கத்தால் ஒரே ஆண்டில் 8 லட்சம் பேருக்குப் புற்றுநோய்? பகீர் தகவல்!

கொரோனா நேரத்தில் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்தி இருந்தன. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மது பழக்கத்தால் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகப் பிரபல அறிவியல் ஆய்விதழான The Lancet Oncology தெரிவித்து இருக்கிறது.

உலகில் கோடிக்கணக்கான பேருக்கு மது பழக்கத்தால் தினம்தோறும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த (2020) ஆண்டில் மட்டும் 7,40,000 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. அதிலும் பெண்களைவிட ஆண்களுக்கு மது பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு கிட்டத்தட்ட 76.7%ஆக இருப்பதும் தெரியவந்துள்ளது.

பொதுவாக புற்றுநோய் என்பது மரபியல் காரணங்களாலும் புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி இல்லாமல் எடை அதிகமாக இருத்தல் போன்ற காரணங்களால் வருகிறது. அந்த அடிப்படையில் புற்றுநோய் தாக்கத்திற்கு மது பழக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 193 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ஏற்பட்ட புற்றுநோய் தாக்கம் மதுப்பழக்கத்தால் ஏற்பட்டது என்றும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் மதுபழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் அளவில் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் உணவுக்குழாய் புற்றுநோய் 1.9 லட்சம் பேருக்கும் கல்லீரல் புற்றுநோய் 1.5 லட்சம் பேருக்கும் மார்பகப் புற்றுநோய் 98,300 பேருக்கும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மது பிரியங்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

More News

12ஆம் வகுப்பு மதிப்பெண் வெளியிடும் தேதி: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி கடந்த சில வாரங்களாக

'பாகுபலி'யின் அடுத்த பாகத்தில் இணையும் நயன்தாரா!

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது

3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட் பழம்பெரும் நடிகை உயிரிழப்பு!

சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது வாங்கிய பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சுரேகா

கம்பி கட்டுற கதை விட்ட சௌமியா....! பணம் முதல் 3 திருமணம் வரை செய்த தில்லாலங்கடி..!

திருமணம் செய்துவிட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி பல இளைஞர்களை ஏமாற்றியுள்ளார் சௌமியா. அதுவும் மாஜி அமைச்சரின் பெயரைச் சொல்லி, பித்தலாட்டம் செய்தது அம்பலமாகியுள்ளது.

பாலியல் தொல்லை தந்த பாஜக பிரமுகர்...! புகார் கொடுத்ததால் கத்திக்குத்து.....!

மயிலாடுதுறை மாவட்டத்தில்,  குத்தாலம் பக்கத்தில் இருக்கும் கோழிகுத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான், 60 வயது நிரம்பிய பாஜக நிர்வாகி மகாலிங்கம்