மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்ற தமிழ் நடிகை... பாராட்டும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,May 08 2023]

சமீபத்தில் திரைப்பட புரமோஷன் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயல் ஆனந்தி தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைக் கூறிவருகின்றனர்.

2014 இல் ‘பொறியாளன்‘ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்‘ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘மூடர்கூடம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நவீனின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்துவந்த கயல் ஆனந்தி கடந்த 2021 இல் திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த அவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததாகத் தகவல் வெளியாகியது. தற்போது ‘அலாவுதினின் அற்புத கேமரா‘, ‘ஏஞ்சல்‘ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் இவர் நடிகர் சந்தனுவுக்கு ஜோடியாக ‘இராவணக்கோட்டம் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் மே 12 இல் வெளிவர இருக்கும் நிலையில் இதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கயல் ஆனந்தி கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் என்னுடைய மகனுக்கு சாதியில்லா சான்றிதழ்தான் பெற்றுள்ளேன். இந்த முடிவிற்கு நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களின் உரையாடலுமே காரணம் என்று கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் சாதிக்கு உணர்வுக்கு எதிராக தனது அற்புதமான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

மேஜிக் உலகத்திற்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் நடிகை, பாடகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பன்முகத் திறமையோடு போல்டாக வலம்வரும் நடிகை ஆண்ட்ரியா

மீண்டும் விவாகரத்துக் கொண்டாட்டம்… கடைசியில் கோர விபத்தில் முடிந்த சம்பவம்!

சமீபகாலமாகத் தங்களது பிடிக்காத திருமணங்களில் இருந்து விவாகரத்துப் பெறுவதைச் சிலர் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்கின்றனர்.

மனைவியை 'சாப்பாட்டு பக்கி' என கூறிய தயாரிப்பாளர் ரவீந்தர்.. வைரல் புகைப்படம்..!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னையும் தனது மனைவியையும் சாப்பாட்டுப் பக்கி எனக் கூறி பதிவு செய்துள்ளது பரபரப்பை

திருமணமான ஒரே மாதத்தில் பிரிவா? பிரபல சீரியல் ஜோடி பற்றிய அதிர்ச்சி தகவல்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சிப்பிக்குள் முத்து‘ சீரியல் பிரபலங்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

தில் ராஜூ பாணியில் பேசிய வெங்கட்பிரபு.. 'கஸ்டடி' புரமோஷன் விழாவில் கலகல..!

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ, அந்த படத்தின் புரமோஷன் விழாவில் பேசியது போலவே 'கஸ்டடி' படத்தின் புரமோஷன் விழாவில் வெங்கட் பிரபு பேசியது மேடையை கலகலக்க வைத்தது.