close
Choose your channels

மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்ற தமிழ் நடிகை... பாராட்டும் ரசிகர்கள்!

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் திரைப்பட புரமோஷன் விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கயல் ஆனந்தி தனது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குப் பாராட்டுகளைக் கூறிவருகின்றனர்.

2014 இல் ‘பொறியாளன்‘ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இவர் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்‘ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இதையடுத்து விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் ‘மூடர்கூடம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நவீனின் மைத்துனர் சாக்ரடீஸ் என்பவரை காதலித்துவந்த கயல் ஆனந்தி கடந்த 2021 இல் திருமணம் செய்துகொண்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த அவருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்ததாகத் தகவல் வெளியாகியது. தற்போது ‘அலாவுதினின் அற்புத கேமரா‘, ‘ஏஞ்சல்‘ போன்ற திரைப்படங்களில் நடித்துவரும் இவர் நடிகர் சந்தனுவுக்கு ஜோடியாக ‘இராவணக்கோட்டம் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் மே 12 இல் வெளிவர இருக்கும் நிலையில் இதற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கயல் ஆனந்தி கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் என்னுடைய மகனுக்கு சாதியில்லா சான்றிதழ்தான் பெற்றுள்ளேன். இந்த முடிவிற்கு நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களின் உரையாடலுமே காரணம் என்று கூறியுள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் சாதிக்கு உணர்வுக்கு எதிராக தனது அற்புதமான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது மகனுக்கு சாதியில்லா சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.