close
Choose your channels

தமிழ்நாட்டை காப்பாற்ற ரஜினியும் தேவை: அன்புமணி

Saturday, December 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை அறிவிக்கவுள்ளதால் அவர் என்ன அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே உள்ளது

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, 'அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் ரஜினி சீக்கிரம் வந்தால் நல்லது. அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். முதலில் அவர் சொல்லட்டும்

இன்று தமிழ்நாடு ஐசியூவில் உள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்ற நிறைய பேர் தேவைப்படுவதால் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். முன்பெல்லாம் தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்று கூறி வருவோம். ஆனால் இப்போது முதலில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும், அதன் பிறகு முன்னேற்றி கொள்ளலாம்' என்று அன்புமணி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.