close
Choose your channels

தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Wednesday, July 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினமும் சுமார் 7000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவின் முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆந்திராவில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10,093 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,390 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1213ஆக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநில அரசு கொரோனாவுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.