close
Choose your channels

அஜித்துக்காக எழுதப்பட்ட கதையா 'அண்ணாத்த'

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘அண்ணாத்த’படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு சில வதந்திகள் வெளியான நிலையில் இது நடக்க வாய்ப்பே இல்லை என்று படக்குழுவினர் கூறுகின்றனர்

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ கதையே அஜீத்துக்காக எழுதப்பட்டது என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு அஜித் நடிக்கும் ஒரு படத்தை இயக்க சிறுத்தை சிவா முடிவு செய்தபோது ’விவேகம்’ மற்றும் ‘அண்ணாத்த’ஆகிய இரண்டு கதைகளை அஜித்திடம் கூறியதாகவும் அதில் அஜித் விவேகம் கதையை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது

அதேபோல் 2018 ஆம் ஆண்டு விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கும் போதும் ‘அண்ணாத்த’மற்றும் விஸ்வாசம் ஆகிய கதைகளை கூறியதாகவும் இப்போதும் அவர் ‘அண்ணாத்த’கதையை தேர்வு செய்யாமல் விஸ்வாசம் படத்தின் கதையை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே ‘அண்ணாத்த’படத்தின் முழுக்கதையும் அஜித்துக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையும் போது ‘அண்ணாத்த’படத்தின் கதையில் நடிக்க அஜித் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அதற்குள் ரஜினி-சிறுத்தை சிவா சந்திப்பு நடந்த போது ‘அண்ணாத்த’படத்தின் கதையை அவரிடம் கூறியபோது அவர் உடனே அந்த கதையை ஓகே செய்து விட்டதால் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.