close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலி சொல்லியும் கேட்காத அனுஷ்கா, மலையாள இயக்குனருக்காக செய்த செயல்..!

Tuesday, March 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அனுஷ்கா திடீரென உடல் எடை கூடிய நிலையில் ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படத்தில் நடிக்கும் போது அவர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எஸ்.எஸ்.ராஜமெளலி எத்தனையோ முறை கூறியும், அனுஷ்காவால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. அவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே சில கோடிகள் VFX தொழில்நுட்பத்திற்காக செலவழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அனுஷ்கா தற்போது ஒரு மலையாள திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் அவர் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான ’அருந்ததி’ படத்தில் எப்படி ஸ்லிம்மாக இருந்தாரோ அதேபோல் மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி, ஆர்யா நடித்த ’இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் கதைக்காக உடல் எடையை கூட்டினார். அவர் ஒரு யோகா டீச்சர் என்பதால் கூட்டிய உடல் எடையை குறைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் பல ஆண்டுகளாக உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் ’பாகுபலி’ படத்தில் கூட அதிகமான உடல் எடையுடன் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மலையாள திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்க உள்ளார். ’கதனர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ரோஜின் தாமஸ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ராகுல் சுப்பிரமணியன் என்பவர் இசையமைக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அனுஷ்கா ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனுஷ்கா உடல் எடையை வேகமாக குறைத்துள்ளதாகவும் இன்று இந்த படத்தின் பூஜையில் அவர் ஸ்லிம்மாக இருப்பதை பார்த்து படக்குழுவினர்களே ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.