ரோஹித் சர்மாவை மறைமுகமாக தாக்குகிறாரா அனுஷ்கா ஷர்மா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வீரர்கள் இதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் சில செயல்கள் இதனை உண்மையாக்குகிறது.

உலகக்கோப்பை போட்டியின்போது ரோஹித் கூறிய சில ஆலோசனைகளை விராத் கோஹ்லி ஏற்று கொள்ளவில்லை என்றும், இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் விராத் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரோஹித்சர்மா அன்ஃபாலோ செய்துவிட்டார். ஆனாலும் விராத் கோஹ்லி, இன்னும் ரோஹித்தை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்து கொண்டுதான் இருக்கின்றார்.

இந்த நிலையில் விராத் கோஹ்லியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” ( “A wise man once said nothing. Only truth can shake hands with silence in a mess of false appearances”) என்று தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். அனுஷ்காவின் இந்த பதிவு, ரோஹித்ஷர்மாவுக்கான பதிவு என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால் கேப்டன், துணை கேப்டன் இடையே இருக்கும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

சென்னையின் பழம்பெரும் திரையரங்கில் 'நேர் கொண்ட பார்வை

சென்னையின் பழம்பெரும் திரையரங்கம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ தியேட்டர்.

விஜய்தேவரகொண்டாவிற்கு ஏற்பட்ட சிக்கல். சிவகார்த்திகேயன் படகுழு நிம்மதி

விஜய்தேவரகொண்டா நடிப்பில் உருவாகிய 'டியர் காம்ரேட்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் தற்போது 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'இந்தியன் 2' படம் குறித்த அடுத்த முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன்-2 

அப்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? மணிரத்னத்திற்கு கங்கனா ரனாவத் கேள்வி

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை தங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர். அந்த கடிதத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி,

விஜய்சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் எதிர்ப்பா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.