close
Choose your channels

அப்போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? மணிரத்னத்திற்கு கங்கனா ரனாவத் கேள்வி

Friday, July 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதத்தை தங்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர். அந்த கடிதத்தில் ஜெய் ஸ்ரீராம் என்பதை ஆயுதமாக்கி, போர் முழக்கமிட்டு, சிறுபான்மையினர்களை சிலர் தாக்கி வருவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்களுக்கு 62 பிரபலங்கள் பதில் கடிதம் எழுதி அதனை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் 'இந்தியாவில் நக்சலைட் தாக்குதல், தீவிரவாதிகள் தாக்குதல், காஷ்மீரில் பள்ளிகளைக் கொளுத்தும் தாக்குதல் ஆகியவை நடந்தபோது அந்த 49 பேர்களும் மவுனம் காத்தது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் என்னும் முழக்கமிடும் பக்தர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை என்றும், அரசியல் சார்புடன் 49 பிரபலங்கள் நடந்துகொண்டதாகவும் 62 பிரபலங்களின் கடிதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 62 பிரபலங்களில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.