'ஜெய்ஹோ' பாடலை ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்யவில்லையா? பிரபல இயக்குனர் பேட்டியால் பரபரப்பு..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக கம்போஸ் செய்த ’ஜெய் ஹோ’ என்ற பாடல் ஆஸ்கார் விருதை வென்றது என்பதும் இதன் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் உலக புகழ் பெற்றார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ‘ஜெய் ஹோ’ பாடலை ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்யவில்லை என சமீபத்தில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராம் கோபால் வர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பிரபல இந்தி பாடகர் சுக்வீந்தர் சிங் என்பவர் சல்மான்கான் நடித்த படம் ஒன்றுக்காக கம்போஸ் செய்து வைத்திருந்த பாடல் தான் ‘ஜெய் ஹோ’ பாடல் என்றும், அந்த பாடலை தான் ஏஆர் ரஹ்மான் ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் பயன்படுத்தி கொண்டார் என்று தெரிவித்தார்
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாடகர் சுக்வீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ’ராமகோபால் வர்மா சொல்வதில் உண்மை எதுவுமில்லை என்றும் ‘ஜெய் ஹோ’ பாடல் முழுவதும் ஏ ஆர் ரகுமான் கம்போஸ் செய்ததுதான் என்றும், அவர் தவறாக புரிந்து கொண்டு அடிப்படை ஆதாரம் இல்லாமல் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் ‘ஜெய் ஹோ’பாடல் குறித்து ஆதாரம் இல்லாத தகவலை பரப்பிய ராம் கோபால் வர்மாவுக்கு ஏ ஆர் ரஹ்மானின் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments