close
Choose your channels

கமல்ஹாசன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் சோகம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!

Monday, April 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் தாய் மாமா சீனிவாசன் என்பவர் இன்று காலமான நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசன் சாரின் தாய் மாமா திரு.சீனிவாசன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருந்தமுற்றோம்.

திரையுலகம் - அரசியல் இரண்டிலும் கமல் சாருக்கு உற்றத் துணையாக திகழ்ந்த பெரியவர் திரு.சீனிவாசன் அவர்களின் மறைவு, அவர்களுடைய குடும்பத்தினருக்கு பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் கமல் சார் மற்றும் அவரது குடும்பத்தினர் - நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னதாக கமல்ஹாசன் தனது தாய்மாமா மறைவு குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

எனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த ஆருயிர் மாமா சீனிவாசன் இன்று தன்னுடைய 92-வது வயதில் கொடைக்கானலில் காலமானார். புரட்சிகரமான சிந்தனைகளுக்காகவும், துணிச்சலான செயல்களுக்காகவும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு வீரயுக நாயகனாக திகழ்ந்தவர் வாசு மாமா.

இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவரது உடல் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்றிரவு கொண்டு வரப்படும். நாளை (23-04-24) காலை 10:30 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment