close
Choose your channels

நாளை ஐபிஎல் இறுதி போட்டி: ஏ.ஆர்.ரஹ்மான் தந்த ஆச்சரிய அறிவிப்பு

Saturday, May 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்தில் தனது நிகழ்ச்சி நடைபெறும் என்று ஒரு ஆச்சரிய அறிவிப்பை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

ஐபிஎல் போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ளது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் நாளைய போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெறுவது எந்த அணி என்பது தெரியவரும்.

இந்த நிலையில் உலகிலேயே மிக பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டின் ஐபிஎல் நிறைவு விழா, போட்டிக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இதில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் பயணத்தின் பெருமையை போற்றும் வகையில் நாளை இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றும், நாளை மாலை 6.25 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் என்னை நீங்கள் நேரலையில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.