close
Choose your channels

இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால்.. இளையராஜா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்!

Thursday, September 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால் எங்களுடைய சேருமிடம் தமிழ்நாடு தான் என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அந்நாட்டிற்கு சென்று இருந்தார் என்பதும் கனடாவில் நடந்த இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. மேலும் கனடா மேயர், ஏ.ஆர்.ரஹ்மான் பெயரை அந்நாட்டில் உள்ள சாலை ஒன்றுக்கு வைத்து பெருமைப்படுத்திய தகவலையும் பார்த்தோம்.

அதேபோல் இசைஞானி இளையராஜா சமீபத்தில் புடாபெஸ்ட் என்ற நகருக்கு சென்றிருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியுள்ளனர். விமான நிலையத்தில் இருவரும் சந்தித்துக்கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ‘நாங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம், ஆனால் எங்களின் சேருமிடம் தமிழ்நாடு தான்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos