close
Choose your channels

'அரண்மனை' படத்தின் 4வது பாகம்.. மாஸ் நடிகருடன் களமிறங்கும் சுந்தர் சி!

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் நான்காவது பாகத்தில் மாஸ் நடிகருடன் அவர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’அரண்மனை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும், 2021 ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்தது.

இந்த நிலையில் ’அரண்மனை’ படத்தில் நான்காம் குறித்த பணிகளை விரைவில் சுந்தர் சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ’அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களிலும் மாஸ் நடிகர்கள் யாருமில்லாத நிலையில் நான்காவது பாகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் சுந்தர் சி களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.