என் மகள் இவரின் வெறித்தனமான ரசிகை: பிக்பாஸ் போட்டியாளர் குறித்து அர்ச்சனா!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா தனது சக போட்டியாளர் ஒருவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’என் மகள் இவருடைய வெறித்தனமான ரசிகை’ என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா, தனக்கென ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு தன்னுடைய குரூப்பில் சேராதவர்களை வெளியேற்றி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் சோம்சேகர், கேபி, நிஷா, ரமேஷ், ரியோ, ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பல போட்டியாளர்கள் இன்னும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் உள்ளனர் என்பதும் ஒவ்வொருவரும் இன்னொருவரின் வீட்டிற்கு சென்று தங்களது நட்பை மேலும் வலுவாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் எந்த சீசனிலும் நடக்காத ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சோம்சேகரை சந்தித்த அர்ச்சனா அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் ’ஒரு ஹலோ என்று தொடங்கிய நட்பு தற்போது மிகச்சிறந்த நட்பாக உள்ளது. எனது மகள் இந்த நபரின் மிகப்பெரிய ரசிகை. இந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி சோம் நண்பராக கிடைத்தது

சோம் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியாளர். மேலும் வாழ்நாள் முழுவதற்குமான எனக்கு ஒரு நண்பர் கிடைத்து விட்டார்’ என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அர்ச்சனாவின் இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… வைரல் வீடியோ!

இந்தியா- ஆஸ்திரேலியாவுடனான சுற்றுப் பயணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முடிவுக்கு வந்தது விஷ்ணு விஷாலின் அடுத்த படம்: விரைவில் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல

திரையரங்குகளில் விஷாலின் 'சக்ரா': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வந்த நிலையில்

நேர்த்திக்கடன் மொட்டையுடன் நடராஜன்: வைரல் புகைப்படங்கள்

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பவுலர் ஆகத்தான் சென்றார். ஆனால் அவருக்கு இந்திய அணியில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை

9,11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் தேதியை அறிவித்த தமிழக அரசு!

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே