close
Choose your channels

என் மகள் இவரின் வெறித்தனமான ரசிகை: பிக்பாஸ் போட்டியாளர் குறித்து அர்ச்சனா!

Sunday, January 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா தனது சக போட்டியாளர் ஒருவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ’என் மகள் இவருடைய வெறித்தனமான ரசிகை’ என்று கூறியிருப்பது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அர்ச்சனா, தனக்கென ஒரு குரூப்பை வைத்துக்கொண்டு தன்னுடைய குரூப்பில் சேராதவர்களை வெளியேற்றி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் சோம்சேகர், கேபி, நிஷா, ரமேஷ், ரியோ, ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பல போட்டியாளர்கள் இன்னும் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் உள்ளனர் என்பதும் ஒவ்வொருவரும் இன்னொருவரின் வீட்டிற்கு சென்று தங்களது நட்பை மேலும் வலுவாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் எந்த சீசனிலும் நடக்காத ஒன்றாக உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் சோம்சேகரை சந்தித்த அர்ச்சனா அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதில் ’ஒரு ஹலோ என்று தொடங்கிய நட்பு தற்போது மிகச்சிறந்த நட்பாக உள்ளது. எனது மகள் இந்த நபரின் மிகப்பெரிய ரசிகை. இந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி சோம் நண்பராக கிடைத்தது

சோம் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றியாளர். மேலும் வாழ்நாள் முழுவதற்குமான எனக்கு ஒரு நண்பர் கிடைத்து விட்டார்’ என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அர்ச்சனாவின் இந்த பதிவும் அவர் பதிவு செய்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.