close
Choose your channels

நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.. என்ன காரணம்?

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் இளம் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்த நிலையில் யாஷிகா போலீசாரிடம் வாக்குமூலம் தந்த போது ’காரை ஓட்டியது நான் தான் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதி வேகமாக காரை ஓட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், யாஷிகாவின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று அவர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து 25ஆம் தேதிக்குள்ள அவர் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.