சூப்பர்ஹிட் இயக்குனரின் அடுத்த படத்தில் அருண் விஜய் வில்லனா? இன்று முதல் படப்பிடிப்பு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சமீபத்தில் சூப்பர் ஹிட் வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரின் அடுத்த படத்தில் ’யானை’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்த அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ என்ற சூப்பர்ஹிட் வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யா நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படத்தை இயக்கி வருகிறார்
இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அருண்விஜய் ஏற்கனவே வில்லனாக அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ உள்பட ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வரும் நிலையில் மீண்டும் வில்லனாக நடிக்கவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments