close
Choose your channels

மரணத்திற்கு முந்தைய நாள் மரணம் குறித்து பதிவு செய்த பிரதாப் போத்தன்!

Friday, July 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடலுக்கு இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் பிரதாப்போத்தன் மரணத்திற்கு முன்பு தனது பேஸ்புக்கில் மரணம் குறித்து சில பதிவுகளை செய்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. நாம் தினம் எச்சில் விழுங்குவதால் கூட மரணம் ஏற்படுகிறது என்று ஒரு பதிவு செய்துள்ளார்.

மற்றொரு பதிவில் ’நீங்கள் ஒரு நோயின் காரணத்தை சரியாக கண்டுபிடித்து குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தி வருகிறீர்கள் என்றால் நீங்கள் மரணம் வரை மருந்துகளை தான் நம்பியிருக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

இன்னொரு பதிவில் சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள், ஆனால் என்னை பொறுத்தவரை அது காதல் என்பேன், வாழ்க்கை என்பது கடைசிவரை கட்டணங்களைச் செலுத்தியே கழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

மரணத்திற்கு முந்தைய நாட்களில் பிரதாப் போத்தன் மரணம் குறித்து பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos