close
Choose your channels

மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் அருண்விஜய்

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கிய மல்டி ஸ்டார் படமான 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடிகர் அருண்விஜய் அபாரமாக நடித்து பாராட்டுக்களை பெற்ற நிலையில் தற்போது நவீன் இயக்கத்தில் மீண்டும் ஒரு மல்டி ஸ்டார் படத்தில் நடிக்கவுள்ளார்.

'மூடர் கூடம்' நவீன் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் என இரண்டு நாயகர்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு ஆகிய முன்னணி நடிகர்களும், 'அர்ஜூன் ரெட்டி' புகழ் ஷாலினி  ரெட்டியும் நடிக்கவுள்ளதால் இதுவும் ஒரு மல்டி ஸ்டார் படமாக கருதப்படுகிறது.

பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக்கை இன்று மாலை 6 மணிக்கு பிரபலம் ஒருவர் வெளியிடவுள்ளார். இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் தெரியவரும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.