close
Choose your channels

அர்ஜூன் மீதான மீடூ விவகாரம்: ஸ்ருதி கூறிய பொய் அம்பலம்.

Thursday, November 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் கிங் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை மீடூவில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த விவகாரத்தில் நடிகை ஸ்ருதி கூறிய பொய் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிக்கு திருமணம் ஆகியதாக செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவந்த நிலையில் அந்த செய்தியை ஸ்ருதி மறுத்து வந்தார். இந்த நிலையில் அர்ஜூன் மீது போலீஸ் புகார் அளித்த நடிகை ஸ்ருதி தான் திருமணமானவர் என்றும் தன்னுடைய கணவர் பெயர் ராம்குமார் என்றும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வந்த ஸ்ருதியின் பொய் அம்பலத்திற்கு வந்துள்ளது.

வாய்ப்புக்காக திருமணம் ஆனதையே மறைத்து பொய் கூறிய ஸ்ருதியின் மீடூ குற்றச்சாட்டில் மட்டும் எப்படி உண்மை இருக்கும்? என சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் அர்ஜூன் மீது ஸ்ருதி கூறிய மீடூ குற்றச்சாட்டுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.