close
Choose your channels

தவறான தகவல் தருகிறார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த அருண் விஜய்..!

Saturday, March 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தவறான தகவல் தருகிறார் என பிரபல யூடியூப் சேனல் மீது நடிகர் அருண் விஜய் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ள அருண் விஜய் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் வெளியான ’மிஷின் சாப்டர் ஒன்’ என்ற படத்தை கொடுத்து அவர் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் இருந்து வருகிறார். அதேபோல் ’பார்டர்’ என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சகோதரி மகள் திருமணம் குறித்த புகைப்படங்களை அருண் விஜய் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ‘தன்னை பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான கருத்துக்களை தனியார் யூடியூப் சேனல் ஒன்று வீடியோ மூலம் பதிவு செய்துள்ளது என்றும் இதனால் தனது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்’. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.