விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் ஒரு மணி நேரம் சாலையில் கிடந்த தமிழ் சினிமா நடிகை.. அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Monday,March 18 2024]

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் யாராலும் கவனிக்கப்படாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’பொங்கி எழு மனோகரா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். அதன் பிறகு இவர் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ விஜய் ஆண்டனியின் ’சைத்தான்’, விமல் நடித்த ’கன்னி ராசி’ ’பிஸ்தா’ மற்றும் ’ஆயிரம் பொற்காசுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அருந்ததி நாயர் நேற்று தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்து சுமார் ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் இருந்ததாகவும் சாலையில் சென்றவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து உடனடியாக அவர்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மருத்துவரின் கண்காணிப்பில் 24 மணி நேரமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More News

டப்பிங் யூனியன் சங்க தேர்தல் முடிவுகள்.. ராதாரவிக்கு டஃப் கொடுத்தார்களா போட்டியாளர்கள்?

டப்பிங் யூனியன் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் ராதாரவி வெற்றி பெற்று மீண்டும் தலைவர் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் போலவே அஜித்தும் திரையுலகில் இருந்து விலகுகிறாரா? என்ன காரணம்?

தளபதி விஜய் தற்போது 'கோட்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் 'தளபதி 69' படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்த படத்தை முடித்துவிட்டு அவர் முழு நேர

திருமணமான ஒரே மாதத்தில் 65 கிலோ.. வேற லெவல் வீடியோவை வைரல் செய்த 'இந்தியன் 2' நடிகை..!

'இந்தியன் 2' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 65 கிலோ எடை தூக்கி வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில்

செருப்பால் அடிப்பேன் என சொன்ன பெற்றோர்.. நொந்து நூலான இளைஞருக்கு பாலா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

பைக் வாங்கித் தாருங்கள் என்று பெற்றோரிடம் கேட்டதற்கு செருப்பால் அடிப்பேன் என்று கூறினார்கள் என பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட

'குட்நைட்' நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

மணிகண்டன் நடித்த 'குட்நைட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் நடந்துள்ள நிலையில் திருமணம் குறித்த