close
Choose your channels

விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் ஒரு மணி நேரம் சாலையில் கிடந்த தமிழ் சினிமா நடிகை.. அதிர்ச்சி தகவல்..!

Monday, March 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் யாராலும் கவனிக்கப்படாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’பொங்கி எழு மனோகரா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். அதன் பிறகு இவர் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ விஜய் ஆண்டனியின் ’சைத்தான்’, விமல் நடித்த ’கன்னி ராசி’ ’பிஸ்தா’ மற்றும் ’ஆயிரம் பொற்காசுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அருந்ததி நாயர் நேற்று தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்து சுமார் ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் இருந்ததாகவும் சாலையில் சென்றவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து உடனடியாக அவர்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மருத்துவரின் கண்காணிப்பில் 24 மணி நேரமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.