close
Choose your channels

கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலே சாவு.. அருண்ராஜா காமராஜின் 'லேபிள்' இந்த வார எபிசோடு..!

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான ‘லேபிள்’ என்ற வெப் சீரியல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்ப முதலிலேயே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த வெப்சீரியலின் 9வது எபிசோடு இந்த வாரம் வெளியாகி உள்ள நிலையில் அதில் விறுவிறுப்பான காட்சிகள் உள்ளன.

தங்களுடைய லேபிளை மாற்ற வேண்டும் என்று ஒரு பக்கம் வழக்கறிஞர் ஜெய் போராடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவருக்கு நெருக்கமானவர்களே லேபிள் ஆக மாறி உள்ளனர். குறிப்பாக வீரா மற்றும் குமார் ஆகிய இருவரும் லேபிளாக மாறி பாதாளம் என்ற மிகப்பெரிய ரவுடியை போட்டு தள்ளுகின்றனர். இதனை அடுத்து அடுத்தடுத்து அவர்கள் கொலைகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் அவர்களுக்கே ஆபத்தாகி முடிகிறது.

அவர்களுடைய தலைவராக இருந்த பங்க் சுரேஷ் என்பவர் இருவரையும் போட்டு தள்ள முடிவு செய்து ஒரு மிகப்பெரிய கூட்டத்தை அனுப்பி வைக்கிறார். அந்த கூட்டம் வீரா, குமாரை சுற்றி வளைக்க, இருவரும் ஆவேசமாக முடிந்தவரை தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடினாலும் இந்த சண்டையில் கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு என்பதற்கேற்ப இருவரும் கொல்லப்படுகின்றனர். தங்களுடைய ஏரியாவின் லேபிளை மாற்ற வேண்டும் என்று போராடி வரும் ஜெய்க்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஜெய்க்கு நீதிபதியாக புரமோஷன் கிடைக்கும் நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வரும் ’ஐயா’ என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். இந்த எபிசோடில் பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் உள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் எபிசோடுகளில் என்னென்ன திருப்பங்கள் வரும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.