close
Choose your channels

'நம்பாதேங்கிறத விட சாயாதே' என்பது தான் கரெக்ட்.. கமல்ஹாசன் கூறிய அறிவுரை யாருக்கு?

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 83 வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் உறவினர்களின் வருகை குறித்த அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்கிறார். மேலும் உறவினர்கள் சொன்ன அறிவுரையில் எவையெல்லாம் ஏற்புடையது? எவையெல்லாம் ஏற்பில்லாதது என்று கேட்டார்.

அப்போது விக்ரம் சரவணன் ’யாரையும் நம்பாதே, முன்னாடி ஒன்று பேசுவார்கள், பின்னாடி ஒன்று பேசுவார்கள்’ என்று கூறினார். அதற்கு கமலஹாசன் ’நம்பாதே என்று கூறுவதை விட சாயாதே என்பது தான் கரெக்ட்’ என்று கூறினார்.

இதனை அடுத்து பூர்ணிமா ’முதல் வாரத்தில் இருந்து இப்படி பண்ணி இருந்தால் நீ தான் டாப் பிளேயராக இங்கே இருந்து இருப்பாய் என்று கூறியதாக சொன்னபோது கமல்ஹாசன் அதற்கு ‘இப்போது நீங்கள் டாப் பிளேயர் இல்லை என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு பூர்ணிமா அமைதியாக இருக்கிறார்.

இதையடுத்து மாயா, ‘பிரெண்ட்ஸ்களை எல்லாம் ரொம்ப நம்பாதே என்று சொன்னதாக கூறியபோது அதற்கு கமல்ஹாசன் ’இது ஒரு போட்டி, பிரண்ட்ஷிப் வெளியில போய் வைத்துக் கொள்ளலாம்’ என்று கூறினார்.

மொத்தத்தில் உறவினர்கள் வருகை தந்த அனுபவங்கள் குறித்து போட்டியாளர்கள் கூறுவதும் அதற்கு கமல்ஹாசன் கூறும் கமெண்ட்ஸும் இன்றைய எபிசோடில் ஹைலைட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.