close
Choose your channels

கொரோனா சிகிச்சை மையத்தில் இளம்பெண் கற்பழிப்பு… ஊழியரே செய்த கொடூரம்!!!

Monday, September 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா சிகிச்சை மையத்தில் இளம்பெண் கற்பழிப்பு… ஊழியரே செய்த கொடூரம்!!!

 

மும்பையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை அங்குள்ள சிகிச்சை மையத்தில் பணியாற்றிய ஊழியரே கற்பழித்த கொடூரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இளம்பெண்ணின் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டி அந்த ஊழியர் இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த தீவிர விசாரணையை தற்போது போலீஸார் தொடங்கி இருக்கின்றனர்.

மும்பையை அடுத்த தானே மாவட்டம் மிராரோடு பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனது 10 மாதக் குழந்தையுடன் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவந்த போது மையத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்த 27 வயது வாலிபர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை வெளியே கூறினால் குழந்தையைக் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார். அதனால் பயந்துபோன இளம்பெண் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே கூறாமல் இருந்திருக்கிறார்.

இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வாலிபர் மீண்டும் மீண்டும் இளம்பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்து இருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் நேற்றுமுன்தினம் தனக்கு நடந்த கொடூரத்தை போலீஸாரிடம் தெரிவித்து இருக்கிறார். அதை வழக்காகப் பதிவு செய்த போலீஸார் ஊழியரை கைதுசெய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருக்கின்றனர்.

முன்னதாக கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்து பெங்களூரில் போலியாக கொரோனா பரிசோதனை செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற சம்பவமும் நடைபெற்றது. தற்போது கொரோனா சிகிச்சை மையத்தில் வேலைப்பார்த்த ஊழியரே சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.