ரஜினி படத்தை பயன்படுத்தி மீம் போட்ட ஆஸ்திரேலியா போலீஸ்

  • IndiaGlitz, [Saturday,February 16 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகர் என்பது அவரது படத்தின் உலகளாவிய வசூலை வைத்து முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது ஆஸ்திரேலியா காவல்துறையும் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு விழிப்புணர்வு மீம் ஒன்றை தங்களது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து திடீர் வாகன சோதனை நடத்தியதில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அதில் ஒருவர் அளவுக்கதிகமான போதையால் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா காவல்துறை ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் ஒரு காட்சியைப் வைத்து மீம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அந்த மீமில் போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டு கோமா நிலைக்கு சென்ற நபரின் உடலில் 0.341% ஆல்கஹால் இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 2.0 படத்தில் வரும் ‘This is beyond Science’ என்ற வசனமும் அந்த மீமில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மீமை ரஜினி ரசிகர்கள் அதிகளவு ஷேர் செய்ததால் ஆஸ்திரேலிய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. மேலும் ரஜினியை வைத்து மீம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆஸ்திரேலியா காவல்துறையினர்களுக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

More News

சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்: பாகிஸ்தான் ஊடகம் செய்தி

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலால் 44 இந்திய வீரர்களை இழந்த இந்தியா கடும் கோபத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை

'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?

அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய படைப்பான 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும்,

விஜய் ஒரு பிறவி டான்ஸர்: அஜித் பாராட்டு

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதாத நாள் இல்லை என்பதும் இந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் மோதலால் சமூக வலைத்தளங்கள் எப்போதும் பரபரப்பில் இருக்கும்

வீரமரணம் அடைந்த வீரரின் உடல் வருவதற்குள் காப்பீட்டு தொகையை அளித்த எல்.ஐ.சி

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புலாவா பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.

திடீரென மதம் மாறிய டி.ராஜேந்தர் மகன்

நடிகர், இயக்குனர், உள்பட பல அவதாரங்களில் ஜொலித்து வரும் டி.ராஜேந்தர் சமீபத்தில் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.