close
Choose your channels

நிஷா வெளியேறியபோது ரம்யாவும் பாலாவும் செய்த வேலையை பாருங்க!

Monday, December 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று நிஷா வெளியேற்றப்பட்ட போது அனைவரும் கண்ணீருடன் அவரை வழியனுப்பி வைத்தனர். குறிப்பாக அர்ச்சனா மற்றும் ரியோ தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக கண்ணீருடன் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர். சோம்சேகர், கேபி ஆகியோர்களும் வருத்தத்துடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் நிஷா அனைவரிடம் கட்டிப்பிடித்து விடை பெற்றுக் கொண்டிருந்தபோது ரம்யா மற்றும் பாலா ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நெட்டிசன் ஒருவர் குறும்படமாக பதிவு செய்துள்ள இந்த வீடியோவில் அந்த சீரியசான நேரத்திலும் கூட இருவரும் சிரித்துக் கொண்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது என்பதுதான் உண்மை

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை எட்டு பேர் வெளியேறிய நிலையில் யாருடைய வெளியேற்றத்தின்போது ரம்யா அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் இயல்பாக அவரது டிரேட் மார்க் சிரிப்புடன் அனைவருக்கும் விடை கொடுத்தார் என்பதும் அதேபோல் தான் நேற்றும் நிஷாவுக்கு புன்னகையுடன் விடை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos