close
Choose your channels

ரூ.13 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது இந்த போட்டியாளரா?

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பணமூட்டை மற்றும் பணப்பெட்டி ஆகிய இரண்டு வாய்ப்புகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் 3 லட்ச ரூபாய் பணமூட்டையை கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பணப்பெட்டி 3 லட்ச ரூபாய் என்ற மதிப்புடன் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டப்போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அமுதவாணன், மைனா மற்றும் அசீம் ஆகிய ஐவரில் ஒருவர் இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவார்கள் என்று கூறப்பட்டது.

விக்ரமன், அசீம் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேருக்குமே டைட்டில் வின்னர் பட்டத்திற்கான வாய்ப்பு இருப்பதால் அவர்கள் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பில்லை என்றே கணிக்கப்பட்டது. இதனை அடுத்து மைனா அல்லது அமுதவாணன் ஆகிய இருவரில் ஒருவர் இந்த பணப்பெட்டியை எடுத்து வெளியே செல்வார்கள் என்றும் பார்வையாளர்கள் கணித்திருந்தனர்.

அதன்படியே சற்றுமுன் வெளியான தகவலின் படி அமுதவாணன் ரூபாய் 13 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ரூபாய் 21 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விக்ரமன் வெளியேறியதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பதும் ஆனால் அதில் உண்மை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.