கடைசி நேரத்தில் ராபர்ட் இடம் தெளிவாக விளக்கிய ரக்சிதா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்துள்ளனர் என்பதும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர் என்பதும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியவரும்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோவில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலில் அமுதவாணன் கூறியபோது ’ஷிவின் மீது முதலில் வெறுப்பாக இருந்தது என்றும் ஆனால் தற்போது அவரைப் பற்றி நான் புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் விக்ரமன் குறித்து தான் தவறாக எண்ணிக் கொண்டிருந்ததை குறிப்பிட்ட தனலட்சுமி, தற்போது இது ஒரு கேம் தானே, எதற்கு இவ்வளவு சீரியஸாக எடுத்து கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
இதனை அடுத்து ராபர்ட்டை அருகில் வைத்து கொண்டு ரக்சிதா பேசியபோது, ’இப்போது கூட நான் சொல்கிறேன், என்னை பொருத்தவரை எனக்கு எதுவுமே தப்பாக தோன்றவில்லை. யாருக்கு யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பிடிக்கலாம். இதன் பிறகும் நான் உங்களுடன் அழகான நட்புடன் இருக்கவே விரும்புகிறேன் என்று ராபர்ட் இடம மனம் திறந்து கூறுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரக்சிதாவை ஒருதலையாக ராபர்ட் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் தெளிவாக தன்னுடைய நிலையை ரக்சிதா எடுத்து விளக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day101 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/0EQitFFDzY
— Vijay Television (@vijaytelevision) January 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments