டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்.. நேரடியாக இறுதிக்கு தகுதி பெறும் போட்டியாளர் யார்?

  • IndiaGlitz, [Tuesday,January 03 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 15 நாட்களே மீதமிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். தற்போது இருக்கும் 8 போட்டியாளர்களில் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் ஒரு கடுமையான டாஸ்க் மூலம் அந்த நபர் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் கடந்து 5 சீசன்களில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த ஆறாவது சீசனிலும் இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வைக்கப்படுகிறது.

கடும் போட்டி சோதனைகள் என பலவற்றைக் கடந்து இறுதிக்கு செல்லும் முதல் போட்டியாளர் யார் என தீர்மானிக்கும் வாரம் இது என பிக்பாஸ் அறிவிக்கின்றார். வார இறுதியில் எந்த நபர் அதிக புள்ளிகள் எடுக்கிறாரோ அவருக்கு டிக்கெட்டு டு ஃபினாலே வழங்கப்பட்டு நேரடியாக இறுதி போட்டிக்கு அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை மிகுந்த சிரத்தையுடன் செய்து வரும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. நேரடியாக இறுதிக்கு செல்லும் அந்த போட்டியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

More News

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவின் லிப்லாக்.. கொடுத்து வைத்த அந்த நபர் யார்?

புத்தாண்டு கொண்டாட கோவா சென்ற நடிகை தமன்னா அங்கு தனது காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் அதிர்ஷ்டசாலி யார்

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் பிரபல நிறுவனம்!

'கேஜிஎஃப் 1', 'கே ஜி எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே

50 ஆண்களை ஏமாற்றிய திருமண ராணி.. அதிர்ச்சியில் 51வது கணவர்!

கீழக்கரையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி 50 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அதற்குள் ரூ.100 கோடிக்கு வியாபாரமா? 'சூர்யா 42' படத்தின் ஆச்சரிய தகவல்!

 சூர்யா நடித்துவரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கிய நிலையில் அதற்குள் நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

முதல் நாளே தூள்.. 'தளபதி 67' படப்பிடிப்பு ஆரம்பமானதை உறுதி செய்த பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று