close
Choose your channels

அதற்குள் ரூ.100 கோடிக்கு வியாபாரமா? 'சூர்யா 42' படத்தின் ஆச்சரிய தகவல்!

Monday, January 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்துவரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் தொடங்கிய நிலையில் அதற்குள் நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ’சூர்யா 42’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் சூர்யா 13 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பிரமாண்டமாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் சரித்திர கதையம்சம் கொண்டது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை மற்றும் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு பென் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த தகவல் உண்மையாக இருந்தால் ’சூர்யா 42’ படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.