close
Choose your channels

பிக்பாஸ் ஆரியின் அடுத்தகட்ட நகர்வு: முக்கிய அறிவிப்பு

Sunday, February 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரி இன்று தனது ரசிகர்களை சந்திக்கிறார் என்பதும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் மால் ஒன்றில் அவர் ரசிகர்களிடம் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும், இன்று மாலை 04.30 மணிக்கு ஆரி தனது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆரி தன்னுடைய ஏராளமான ரசிகர்களை இன்று நேரில் சந்திப்பார் என்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்றும் கூறப்படுகிற.து இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி ஒரு முக்கிய பதிவை செய்துள்ளார்.,

அதில் எனது அடுத்த கட்ட நகர்வு குறித்த அறிவிப்பை உங்களிடம் இன்று பகிர்ந்து கொள்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பிக்பாஸ், சினிமாவை தாண்டி அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே அவரது இரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எண்ணமாக உள்ளது

ஆரி ஒருவேளை ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேரப் போகிறாரா? அல்லது தனி கட்சி ஆரம்பிக்க போகிறாரா? அவரது அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.