close
Choose your channels

என் தாய்க்கு சமர்ப்பணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Saturday, February 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசு நேற்று கலைமாமணி விருது குறித்த பட்டியலை வெளியிட்டது என்பதும் அந்த பட்டியலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் இருந்தது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் இன்று கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது கையால் விருதுகளை வழங்கினார். அந்த வகையில் கலைமாமணி விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் நெகழ்ச்சியுடன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று தனது தாயாருக்கு கலைமாமணி விருதை சமர்ப்பிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது தாயாரிடம் கலைமாமணி விருதை அளித்து அவருடைய காலில் விழுந்து ஆசி வாங்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலைமாமணி பட்டத்தை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்ற சிவகார்த்திகேயனுக்கு சக திரையுலக கலைஞர்களும் ஏராளமான ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.